Friday, July 3, 2009

அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு

எனது தடத்தில் படிந்த
குருதிக்கறையை கழுவ
நீண்ட வரிசையில் நான்

பற்களில் படிந்த இரத்தக்கறையை
கழுவ என் முன்னால் நின்ற காந்தி
தன் கோவணத்தை தேடியபடியே
தன் தடியை தவறவிட்டார்

கந்தக நெடி பரவிய விழிகளுடன்
பிணவாடை சுமந்த புத்தனோ
தன் சாம்பல் குவியலை காந்தியின்
கோவணத்தில் கவனமாய் மறைத்தார்

காந்தியின் தடியை களவாடிய
ஊடகங்களோ ஒளிபரப்பின
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு...

3 comments:

Athisha said...

சுளீர்..!

களந்தை பீர்முகம்மது said...

அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு... ////

ஹா ஹா ஹா ஹா

Anonymous said...

சுளீர்......

Post a Comment