Monday, June 8, 2009

காயத்தின் குருரம்



சூழலின் வெளியில் தொலைத்த
எனது உணர்வலை
எப்போதாவ‌து என் சுவாசக்கிற்றை
க‌ட‌ந்து செல்கையில் ப‌ர‌வும் ப‌ர‌வ‌ச‌ம்
வார்த்தைக்குள் மட்டும் வ‌ருவ‌தேயில்லை
நாட்ப‌ட்ட‌ என‌து காய‌த்தை
குருதிக‌ல‌ந்த‌ ம‌ருந்துக‌ள் கூட‌
சீண்ட‌ ம‌றுக்கின்ற‌ன‌

என் புகைத்தலின் ஒரு பொழுதில்
க‌ட‌ந்த‌ என் ந‌ண்ப‌னின் முக‌த்தில்
என் காய‌த்தின் சீழ் வ‌டிவதை
சிரித்து ம‌றைக்க‌ முயன்ற‌தை
நானும் சிரித்து ம‌றைத்தேன்

ப‌ரஸ்ப‌ர‌ம் இர‌த்த‌க்க‌ரை ப‌டிந்த‌
ப‌ற்க‌ளை ப‌ரிமாறிய‌ப‌டி
ம‌துவிடுதியின் இரைச்சலை
அதிகப்படுத்தி வெளியில் பார்க்கையில்
அனைவரின் முகத்திலும்
எனது காயத்தின் குருரம்

1 comments:

Anonymous said...

கவிதையை படித்தவுடன் புல்லரித்துவிட்டது நண்பா,
ஆனா ஒரு எழவும் புரியல..என்ன மசுருக்கு இந்த மாதிரி கவிதை எழுதி உயிரை வாங்குகிறீர்கள்..
ஓசியில் ஒரு பிளாக் கிடைத்தால் ஓ....ஊரில் இருக்கிறவன் உசிரை வாங்குவதா?

Post a Comment