Tuesday, June 2, 2009

இர‌த்த‌ம் ப‌ச்சைய‌ வாச‌த்துட‌ன்



நீண்ட‌ ஒரு மாலைப்பொழுதில்
என் பார்வைக்கு அப்பால்
தோன்றிய அந்த மாநிறப் பெண்
தன் குதிகால் உய‌ர்ந்த‌ செருப்பை
அவ‌ளின் ம‌ல்லிகைப் பூவால் அல‌ங்க‌ரிப்ப‌தை
க‌ட‌ந்து சென்ற‌ காற்றின் வ‌ழியே
என‌க்கு உண்ர்த்தினால்
என‌து கோரைப்ப‌ற்க‌ள் இப்போது
அவ‌ளின் உதிர‌த்தைச் சுவைக்க‌
வ‌ள‌ர‌த்தொட‌ங்கின‌
ம‌ல்லிகையின் வாச‌னை நெருங்க‌ நெருங்க‌
க‌ட்டுக்க‌ட‌ங்கா என‌து பசியால்
அவ‌ள் கழுத்தின் ஓர‌ம்
மெல்லிய‌தாய் ப‌தித்தேன் என‌து ப‌ற‌க‌ளை
அவ‌ளின் இர‌த்த‌ம் ப‌ச்சைய‌ வாச‌த்துட‌ன்
அவ‌ளின் காய்த்துப்போன கைக‌ளால்
என‌து அணுறுப்பை அழித்தி பிடித்தால்
அவ‌ளின் இர‌த்த‌ம் வ‌ற்றிய‌ உட‌லை
க‌வ்விய‌ப‌டி மேலேழுந்து சென்றேன்
அவ‌ளின் மெல்லிய‌ முன‌க‌ல்
என்னை அதிக‌ தூர‌ம் இழுத்து சென்ற‌து
விடிய‌லை நோக்கி ந‌க‌ர்ந்து போது
என‌து தூர‌ம் சுருங்கி என‌து ப‌டுக்கைய‌றையில்
நாய்குட்டியாய் நான்
அவ‌ளோ ப‌டுக்கை விரிப்பை
சுற்றிய‌ப‌டி பூஜைய‌றையில்

0 comments:

Post a Comment