Wednesday, July 15, 2009

பதினென் பருவங்களின் பேய்கள்



இரவு முழுவதும்
சூழ்ந்த பிணவாடையில்
எனது கனவில் வந்த பேய்கூட
முகம் சிதைந்த நிலையில்

அம்மா சொன்ன மோகினிக்கதை
மோகினியை பார்க்க விரும்பிய
பதினென் பருவங்களின் பேய்கள்
ஏனோ இப்போது வருவதேயில்லை

அய்யனார் கோயில் பூசாரியோ
தனது உடுக்கையை நித்தம் தடவி
குதிரைக்கனவில் பேய்களை தேடி அலைகிறார்

அய்யனோரோ மண் குதிரை
புடைசூழ வெறித்துப்பார்கிறார்
ஆள் வருகையற்ற வீதிகளை

3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஹேமா said...

ஊரின் வெறுமை-உங்கள் மனதின்,எங்கள் மனதின் வெறுமையைச் சொல்கிறீர்களா !

சாந்தி நேசக்கரம் said...

பேய்களால் நிரம்பிய இரவுகளின் நினைவுகள் போய்விட்டன. இப்போ பகல்களும் பேய்களால் சூழப்பட்டு....
சாந்தி

Post a Comment