Tuesday, July 7, 2009

புத்தனின் இரத்தம்

கந்தக நெடி கமழும்
புதத விஹாரில் ஏலம் விடப்பட்ட
புத்தனை எத்தனை கோடிக்கு
எடுப்பதன பலத்த போட்டி

நான் புத்தனில்லை என்று
கதறிய புத்தனின் வார்த்தைகள்
முகம் சிதைந்த குழந்தையின்
கதறில் கலைந்து அதிர்ந்து
கண்ணாடி பேழைக்குள்

இறுதியில் பிணக்குவியலின்
அளவு நிர்யணிகப்பட்ட ஏலத்தில்
காந்தியின் அவுக்கப்பட்ட கோவணம்
பெருமிதமாய் பரப்பியது முடை நாற்றத்தை

பேரழிவு தந்த வாய்ப்புகளை
சுவைக்க சுற்றி அலையும் ஒநாய்கள்
நட்சத்திர விடுதியில் அருந்திய மதுவில்
முடைநாற்றமுடன் பரிமாறப்பட்டது
புத்தனின் இரத்தம்

3 comments:

ஹேமா said...

தொடர்பவன் தொடருங்கள்.

Anonymous said...

காந்தியின் அவுக்கப்பட்ட கோவணம்
பெருமிதமாய் பரப்பியது முடை நாற்றத்தை///

ஆமாம் காந்தியை கற்பழித்தது இந்தியா ஈழத்தில்

தொடர்பவன் said...

நன்றி ஹேமா & அனானி

Post a Comment