Tuesday, October 27, 2009

நிஜங்களை செரித்தபடி



நேரத்தை ஏமாற்றியபடி

கழிந்த பொழுதுகளை

சுமந்த நாட்களால் நிரம்பி

கொதிக்கிறது மனம்

இரவுகளை எதிர்த்து

சண்டையிட ஆயத்ததுடன்

கடக்கிறேன் எனது வாசலை

தொலைக்காட்சி இறைக்கும்

பிம்பங்களுக்குள் கரைந்து

எனது பிம்பத்தை ஸ்தாபிக்க

அலறும் எனது குரல் மெளனமாய் கடக்கிறது

நிஜங்களை செரித்தபடி

0 comments:

Post a Comment