அகிம்சையைப் போதித்து
அனுப்பிவைத்த ஆயுதங்கள்
பிணங்களைப் பரிசளித்தன
புத்தனின் தேசத்திற்கு..
கந்தகநெடி பரவிய
பிணங்களுக்கு அவசரமாய்
பூசப்பட்டது அமைதியின் திரவியம்
சடலங்கள் சிதறிய வெளியெங்கும்
சுற்றிய கழுகுகள் அத்தனைக்கும்
பிரித்தளிக்கப்பட்டன மாயனக் கொல்லைகள்
வரலாற்றை நிறுத்திவைக்க
மாயனக்கொல்லையெங்கும்
பிணங்களைச் சுவைத்தபடி ஓநாயாய்
சுற்றி அலைந்தன ஊடகங்கள்
கல்லறைகள் மறுக்கப்பட்ட
சடலங்கள் கடல் எல்லை தாண்டாமல்
போர்த்தப்பட்ட மஞ்சள் துண்டியில்
கோடிகளின் வாசனை
0 comments:
Post a Comment